முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும்; மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

 

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள  வார்டுகளுக்கு முதல் கட்டமாக 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 02-07-2025 புதன்கிழமை அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால்,  முன்னிலை வகித்தார். வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில்;                                                                                              

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் வாரந்தோறும் மண்டல வாரியாக நடைபெறுகிறது. இதற்கு  பொது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பெறப்படும் பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுவருகிறது. வடக்கு மண்டலத்தைப் பொறுத்தவரை 679 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 675 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நம்முடைய முதலமைச்சர் ஆணைக்கிணங்க மூன்று ஆண்டுகளில் இதுவரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2500 சாலைகள் போடப்பட்டுள்ளது. இன்னும் 997 சாலைகள் விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

வடக்கு மண்டலத்தைப் பொறுத்தவரை சாலை, வடிகால் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறைப்படுத்தி வருகிறோம். வடக்கு மண்டல 5 வார்டுகளில் முதற்கட்டமாக 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் குழாயில் ரீடிங் மோட்டார் பொருத்தும் பணிகளும் நடைபெற உள்ளது. விரைவில் மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

பொதுமக்கள் குடி தண்ணீர் விநியோகம் செய்யும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக மின்மோட்டார் உபயோகித்து தண்ணீர் உறிஞ்சுவதை தவிர்த்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதனால் மற்ற குடியிருப்புகளுக்கு தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும்.

பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் தவிர்க்க மேயர் வேண்டுகோள்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் குப்பைகளை பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்ததி உள்ளோம். மக்களிடம் கேட்டுக்கொள்வது கேரி பேக்குகள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்பாட்டை 80 விழுக்காடு தடை செய்துள்ளோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டுசிறுசிறு கடைகளில் மக்கள் கேரி பேக்குகள் பயன் படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். இது குறித்து மாநகராட்சியின் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தால் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் 563 தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். பின்னர் முகாமில் பெறப்பட்ட குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வாணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பொறியாளர் தமிழ் செல்வன், நகர்நல அலுவலர் மருத்துவர் சரோஜா, நகர உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, பவானி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஸ்லின், சுப்புலட்சுமி, ஜெபஸ்டின் சுதா, காந்தி மணி, ரெங்கசாமி, தேவேந்திரன், கற்ப்பகக் கனி, மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் எம்.சி, திமுக வட்டச் செயலாளர் சி.என்.ரவீந்திரன், இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவகுமார், பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்ட பிரதிநிதி மார்ஷல், உள்பட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் மாவட்டந்தோறும் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது இந்திய தேசத்தின்79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும்.. கொண்டாடப்பட்டு வருகிறது.   நமது ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  நிறுவனர் தலைவர்                    டாக்டர் s . சுந்தர் அவர்களின் ஆனணக்கிணங்க ... மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதின்  செய்தி தொகுப்பு :   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரி...

கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புஸ்தகம் வழங்கும் விழா

        கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக   750ஏழை குழந்தைகளுக்கு நோட்டு - புஸ்தகம் வழங்கும் விழாநடைபெற்றது.   இவ் விழா கோவை மாவட்ட தலைவர் K.M.ராஜா தலைமையில் ..ஹீயுமன் ரைட்ஸ்  நிறுவனத்தலைவரும்  ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளர் ஆசிரியரும◌ான  டாக்டர் சுந்தர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது    இந்த  நிகழ்ச்சியில் 1.கோவை மதுக்கரை  அரசு மேல்நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை காமராஜநகர் அரசு உயர் நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை போத்தனூர் அரசு பள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும்  மற்றும்  குறிச்சி பகுதி அரசு பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன.    மாணவ- மாணவியர்களுக்கு உதவும் வகையில் நடைபெற்ற  இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு...  கோவை தெற்கு மாவட்ட தலைவர்  R.D இரவி - துணைத்தலைவர் திரு. J.B.குமாரசாமி - தெற்கு மாவட்ட செயலாளர்  Sky பால்ராஜ் - தெற்கு மாவட்ட பொருளாளர் கனகராஜ். மற்றும்   வடக்கு மாவ...

மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம்

னித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம் இன்று ஆச்சாரியா குருகுலம் பள்ளியில் (24-07-2024) நடந்த மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  1.கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள அனைத்து நகர, கிராமங்களிலும் மனித உரிமை கழக கிளையை துவக்கி, பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். 2. மழைக்காலம் என்பதால் டெங்கு... நிபா... போன்ற வைரஸ்கள் வேகமாக பரவும் என்பதால் அனைத்து நகரங்களிலும் தூய்மை பணியை துரிதப்படுத்தி அனைத்து பகுதிகளும் 100% தூய்மையாக  உள்ளது என்பதை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நகர மாநகர அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.  3.தமிழகத்தில் மின்சாரம் கணக்கெடுக்கும் முறையை மாத மாதம் எடுக்க வேண்டும். 3. கிருஷ்ணகிரி நகருக்கு விரைவில் தொடர்வண்டியை (ரயில்) விடுவதற்கு அரசியல் தலைவர்களும்... அதிகாரிக ளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. முக்கியமாக திருவண்ணாமலை மேம்பாலம் இரு புறமும் உள்ள குப்பைகளை அகற்றி அங்கு எப்போதும் தூய்மையாக இருக்கும் படி நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். ...